Published : 15 May 2021 03:12 AM
Last Updated : 15 May 2021 03:12 AM

சிறப்பு கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும் : வங்கிகளுக்கு வியாபாரிகள் வேண்டுகோள்

கடனை திருப்பிச் செலுத்த வங்கிகள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வரைமுறைகள் கடுமை யாக்கப்பட்டு பகல் 12 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையோர வியாபாரி கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை மாநகராட்சிப் பகுதிக ளுக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரி கள் உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 20 ஆயிரத் துக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர். இதில் பெரும்பாலானோர், காய்கறி, பழங்கள், துளசி மற்றும் சிற்றுண்டி வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள்.

முழு ஊரடங்கு காரணமாக சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணமும், பொருள் உதவிகளும் தந்து மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும்.

இதேபோல சாலையோர வியா பாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புக் கடன் திட்டத்தில், வங்கிகள் மூலம் எளிதில் கடன்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசின் சிறப்புக் கடன் திட்டத்தில் ரூ.10 ஆயிரம் பெற்றவர்களுக்கு, அதன் தவணையை திருப்பிச் செலுத்த 3 மாதங்கள் கால அவகாசத்தை வங்கிகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x