Published : 15 May 2021 03:12 AM
Last Updated : 15 May 2021 03:12 AM

அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் : பழக்கடை உரிமையாளர் மீது வழக்கு :

பொள்ளாச்சி

கிணத்துக்கடவு சுற்றுவட்டார கிராமங்களில் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும் மளிகை, இறைச்சி, பழக்கடை உள்ளிட்ட கடைகளில், கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படாத கடைகளுக்கு வருவாய்த் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

வருவாய் ஆய்வாளர் ராமராஜ், கிணத்துக்கடவு கிராம நிர்வாக அலுவலர் கேசவமூர்த்தி ஆகியோர் அடங்கிய கண்காணிப் புக் குழுவினர், கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று ஆய்வில் ஈடுபட்டி ருந்தனர்.

அங்கு செயல்பட்டு வந்த பழக்கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால், கண்காணிப்புக் குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ள னர். அப்போது பழக்கடை உரிமையாளர், வருவாய்த்துறை யினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கிணத்துக்கடவு காவல் துறையினருக்கு வருவாய்த்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

காவல் துறையினரைக் கண்டதும் தப்பியோட முயன்ற பழக்கடை உரிமையாளரைப் பிடித்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x