Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

பொறியியல் கல்லூரி வளாக கரோனா பராமரிப்பு மையத்தில் 2 எம்எல்ஏ-க்கள் நேரில் ஆய்வு :

தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கரோனா தொற்றாளர்கள் பராமரிப்பு மையத்தை 2 எம்எல்ஏ-க்கள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

தருமபுரி அடுத்த செட்டிக்கரை பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த வளாகத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கான பராமரிப்பு மையம் மற்றும் சித்தா சிகிச்சை மையம் அமைக்கப் பட்டுள்ளது. இம்மையத்தில் மொத்தம் 600 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இம்மையத்தில் மேற் கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள், அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் உள்ளிட்டவை குறித்து தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் , பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, சிகிச்சை மையத்தில் உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள், சிகிச்சை முறைகள், அவற்றுக்கு தேவையான வசதிகள் ஆகியவை குறித்து சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் ஜெமினியிடம் கேட்டறிந்தனர்.

அப்போது, ‘தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைக்கு வருவோரை தாமதப்படுத்தாமல் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும். அனைவருக்கும் தரமான சிகிச்சை அளித்து குணமடையச் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x