Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

தருமபுரி நகராட்சி தகன மையம் நாள் முழுக்க இயங்க ஏற்பாடு : � நகராட்சி ஆணையர் தகவல்

தருமபுரி நகராட்சி தகன மையம் நாள் முழுக்க செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி எதிரில் உள்ள மயானத்தை ஒட்டி தருமபுரி நகராட்சி தகன மையம் உள்ளது. இங்கு நேற்று தருமபுரி நகராட்சி ஆணையர் தாணுமூர்த்தி நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியது:

தருமபுரி நகராட்சிக்கு சொந்தமான இந்த மின் மயானம் நாள் முழுக்க இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கென சுழற்சி முறையில் பணியாற்ற 3 குழு பணியாளர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். இங்கு எரியூட்டவும், அருகிலுள்ளமயானத்தில் அடக்கம் செய்யவும்வரும் சடலங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் பதிவேடு களில் பதிவு செய்யப்படும். சடலங்கள் எரியூட்டும் பணியை முறைப் படுத்திட, ஏற்கெனவே உள்ள சுகாதார ஆய்வாளர்களுடன் மேலும் 2 சுகாதார ஆய்வாளர்கள், 3 மயான உதவியாளர்கள் ஆகியோரும் பணியமர்த்தப் பட்டுள்ளனர். மேலும் தன்னார் வலர்கள் குழுவினரும் இவர் களுடன் இணைந்து செயல்படுவர். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் உயிரிழப் போரின் சடலங்களை முறையாகஎரியூட்டும் பணியை இந்தக் குழுவினர் மேற்கொள்வர். சடலங்களை எரியூட்ட அதிக தொகை வசூலிக்கும் செயல் களுக்கு இனி இடமிருக்காது. இதுதவிர, சடலங்களுடன் இறுதிச் சடங்கு செய்ய மின் மயானத்துக்கு வரும் உறவினர்கள் காத்திருக்க காத்திருப்புக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி பொறியளர் சுரேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் சசீந்திரன், ரமணசரண் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x