Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM
பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி அருகிலுள்ள கவுரிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன். இவரது மகள்கள் சாதிகா (5), தனு (3). இவர்கள் இவரும், அருகிலுள்ள கொட்லுமாரம்பட்டி கிராமத்தில் உள்ள பாட்டி சத்தியவாணி வீட்டுக்கு சென்றனர்.
நேற்று மாலை சிறுமிகளை வீட்டருகே விளையாட விட்டுவிட்டு மல்லிகை தோட்டத்தில் சத்தியவாணி விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்தார். வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச இவர்களின் நிலத்தில் குட்டை ஒன்று அமைத்தனர். இக்குட்டையில் நேற்று 4 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்துள்ளது. 2 சிறுமிகள் மற்றும் உறவினரின் குழந்தை சந்துரு (5) ஆகிய மூவரும் குட்டையில் இறங்கினர். அப்போது சிறுமிகள் இருவரும் மூழ்கினர். சிறுவனின் அழுகுரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது சிறுமிகள் இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து கிடந்தனர். பாப்பாரப்பட்டி போலீஸார் சிறுமிகளின் உடலை மீட்டனர். சகோதரிகளான சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT