Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

மாஞ்சா நூல் பட்டம் விற்க மேலும் 60 நாட்களுக்கு தடை :

சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் விற்பனை செய்ய, பறக்க விட விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் 60 நாட்களுக்கு நீட்டித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் மாஞ்சா நூல் பட்டத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. மேலும், பலர் காயமுற்று உடல் ஊனம் அடைந்தனர். இதையடுத்து சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் தயாரிக்க, பறக்க விட, விற்பனை செய்ய, சேமித்து வைக்க காவல் ஆணையர் தடைவிதித்தார்.

அதை மீறி மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த உத்தரவையும் மீறி மாஞ்சா நூல் பட்டம் தயாரித்து விற்றவர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மாஞ்சா நூல் பட்டம் மீதான தடையை மேலும் 60 நாட்களுக்கு நீட்டித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி வரும் ஜூலை 11-ம் தேதி வரை தடையை நீட்டித்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x