Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு - மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், திரையுலகத்தினர் நன்கொடை :

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், ஆக்சிஜன், தடுப்பூசி ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக நிதியளிக்கலாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து, கடந்த சில தினங்களாக பல்வேறு கல்வி, நிதி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், திரையுலகினர் நிதி வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் அஜீத் நேற்று ரூ.25 லட்சம் நிதி வழங்கியுள்ளார். அதேபோல, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் ரூ.1 கோடி, அகில இந்திய வங்கிப் பணியாளர்கள் சங்கப் பொதுச் செயலர் வெங்கடாசலம் ரூ.25 லட்சம், எம்ஜிஆர் சிறப்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் லதா ராஜேந்திரன் ரூ.10 லட்சம், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி ரூ.25 லட்சம், குளோபுஸ் பில்டிங்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம், கே.பி.ஆர். மில் செயல் இயக்குநர் சி.ஆர்.அனந்தகிருஷ்ணன் ரூ.1 கோடி, சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் கல்வி நிறுவன வேந்தர் என்.எம்.வீரய்யன் ரூ.1 கோடி, லலிதா ஜுவல்லரி தலைவர் எம்.கிரன்குமார் ரூ.1 கோடி, கோவை மருத்துவ மைய செயல் இயக்குநர் அருண் என்.பழனிசாமி ரூ.1 கோடி, நருவி மருத்துவமனைகளின் தலைவர் ஜி.வி.சம்பத் ரூ.25 லட்சம் வழங்கினர்.

இதுதவிர, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி சார்பில் ரூ.10 லட்சம், அபெக்ஸ் லெபாரட்ரீஸ் நிறுவனத் தலைவர் வணங்காமுடி, சவுந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் ரூ.1 கோடி, சென்னை சிஎஸ்ஐ பிஷப் சார்பில் ரூ.25 லட்சம், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் ஆர்.சேதுாமன் ரூ.1 கோடி, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ரூ.50 ஆயிரம், கவிஞர் வைரமுத்து ரூ.5 லட்சம் நிதியுதவியும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x