Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM
அடுத்த 3 மாதங்களில் ஓய்வூதியம் பெற இருக்கும் தொழிலாளர்கள், பிற நிறுவனங்களில் இருக்கும் வருங்கால வைப்பு நிதிக் கணக்கை ஒன்று சேர்ப்பது உள்ளிட்ட குறைகளையும் தெரிவிக்கலாம். நிறுவன உரிமையாளர்களும் ஓய்வூதியம் தொடர்பான குறைபாடுகளைத் தெரிவிக்கலாம். இக்குறைதீர்க்கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் குறைகளை வாட்ஸ்ஆப் வசதியுள்ள மொபைல்போன் எண்ணிலிருந்து ro.madurai@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மே 14-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
அவர்களுக்கு காணொலிக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான தனி தொடர்பு எண் வழங்கப்படும். அவர்கள் மொபைல் போனில் மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியைப் பதிவிறக்கம் செய்து தனி தொடர்பு எண்ணைப் பயன்படுத்தி ஓய்வூதியர் குறைதீர்க் கூட்டத்தில் பங்கேற்று குறைகளைத் தெரிவித்து உரிய நிவாரணம் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT