Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

முஸ்லிம்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை : கரோனா ஊரடங்கால் எளிமையாக நடந்தது

கரோனா முழு ஊரடங்கால் முஸ்லிம்கள் பெரும்பாலானோர் தங்களது வீடுகளிலேயே ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடத்தினர்.

ஷவ்வால் மாத பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் நேற்று கொண்டாடினர். தொழுகையை வீடுகளிலேயே நடத்த தலைமை ஹாஜி வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து ஏழை, எளியோருக்கு பித்ரா என்னும் உதவிகளை வழங்கிய பின்னர் புத்தாடைகளை அணிந்து, அவரவர் வீடுகளில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

ஆனையூர், மாப்பாளையம், வில்லாபுரம், நெல்பேட்டை, ஹாஜிமார் தெரு, திருமங்கலம், சிலைமான், உசிலம்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. உலக மக்கள் கரோனா பேரிடரில் இருந்து விரைவில் விடுபட சிறப்பு துஆ செய்தனர்.

மதுரையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் முன்பும் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விருதுநகர் பெரிய பள்ளிவாசல், கல் பள்ளி வாசல், சின்ன பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

காரியாபட்டியில் ஏராளமான இஸ்லாமியர்கள் ஈக்தா பள்ளிவாசல் பகுதியில் சிறப்புத் தொழுகை நடத்தினர். ராஜபாளையத்தில் முடங்கியாறு சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் தொழுகை நடத்தினர்.

சாத்தூர், வில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசியிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. பெரும்பாலான இடங்களில் சமூக இடைவெளியுடன் தொழுகை நடைபெற்றது. மாவட்டத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் ரம்ஜான் தொழுகை நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x