Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து - அமைச்சர் மனோதங்கராஜ் ஆட்சியருடன் ஆலோசனை : பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்

குமரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்துடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்துடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அமைச்சர் தெரிவிக்கையில், ‘‘ கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் அதிகமாகசிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் 700 படுக்கைகளும், பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் 244 படுக்கைகளும், கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 200 படுக்கைகளும் ஏற்படுத்தப்பட்டு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும், ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, பயோனியர் குமாரசுவாமி கல்லூரி, கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரி ஆகிய மையங்கள் வாயிலாகவும், கோவிட் பராமரிப்பு மையங்கள் வாயிலாகவும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்பவர்களின் தேவைக்கேற்ப தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் வந்து கொண்டி ருக்கிறது. தனியார் மருத்து வமனைகளுக்கும் தேவையான ஆக்சிஜன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சுகந்தி ராஜகுமாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x