Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறும்போது, “கரோனா பரவல் குறைந்த பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடத்தப்படும். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் பள்ளிக் கட்டிடங்களை எந்த வகையில் பயன்படுத்துவது என்பது குறித்து கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். தனியார் பள்ளிகள் கட்டாய கல்விக் கட்டணம், பேருந்து பயணக் கட்டணம், பள்ளிக்கே செல்லாத நிலையில் சீருடைக் கட்டணம் ஆகியவை வசூலிப்பதாக பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன. இதுகுறித்து முதல்வரின் ஆலோசனையைப் பெற்று உரிய தீர்வு காணப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT