Published : 15 May 2021 03:14 AM
Last Updated : 15 May 2021 03:14 AM

புதிதாக 1,477 பேருக்கு கரோனா தொற்று :

வேலூர்/திருப்பத்தூர்/திருவண்ணாமலை: வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 1,477 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 752 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. வேலூர் மாநகராட்சி, குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளது. தொற்று உறுதியானவர்களில் சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத்திணறல் இருப்பது தெரியவந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 328 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,814-ஆக உயர்ந்துள்ளது. 2,255 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 310 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 397 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,622-ஆக உயர்ந்துள்ளது. 25,520 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 3,762 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 340-ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x