Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM

கரோனா நிவாரண நிதிக்கு - திமுக அறக்கட்டளை ரூ.1 கோடி நிதி :

சென்னை

முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறக்கட்டளை தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கரோனா தொற்று தடுப்பு, நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு அனைத்துத் தரப்பினருக்கும் முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கரோனா நோய்த் தடுப்பு,நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று அறக்கட்டளை தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x