Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM

இரண்டாம் அலையின் வேகம் குறைகிறது - ஒரே நாளில் 3.62 லட்சம் பேருக்கு கரோனா உறுதி :

இந்தியாவில் கரோனா பரவலின் வேகம் அண்மைக்காலமாக சற்று குறைந்து வருவதை ஒட்டி, நேற்று ஒரே நாளில் 3.62 லட்சம் பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

நாடு முழுவதும் கடந்த மே மாதம் முதல் 4 லட்சத்துக்கும் அதிகமாக கரோனா தொற்று பதிவாகி வந்தது. அதுமட்டுமின்றி, கரோனா நோயாளிகளின் எண் ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்றதால், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை களுக்கும், ஆக்சிஜனுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பெருந்தொற்றால் உயிரிழப் போரின் எண்ணிக்கை உயர்ந்தது.

இதனிடையே, கரோனா வைரஸின் இரண்டாம் அலையைசமாளிக்கும் விதமாக, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வைரஸ் கட்டுப்பாட்டு நெறிமுறைகளும் கண்டிப்புடன் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையிலும் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் கடந்த சில நாட்களாக வைரஸ் பரவல் வேகம் கணிசமாக குறைய தொடங்கி இருக்கிறது. 4 லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வந்த தினசரி தொற்று பாதிப்பு ஓரளவுக்கு குறைந்து வருகிறது.

அந்த வகையில், நேற்று நாடு முழுவதும் 3 லட்சத்து 62,272 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் கரோனா நோயாளி களின் எண்ணிக்கை 37 லட்சத்து 10,525-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் 46,781 பேரும், கேரளாவில் 43,529 பேரும், கர்நாடகாவில் 39,998 பேரும், உ.பி.யில் 18,023 பேரும் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெருந்தொற்று பாதிப்புக்கு 4,120 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 58,317-ஆக உயர்ந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, கரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோரின் விகிதமும் அதிகரித்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) புள்ளிவிவரப்படி, நேற்று மட்டும் 3 லட்சத்து 52,181 பேர் பெருந்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.97 கோடியாக உயர்ந்துள்ளது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x