Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவின் முன்னாள் உதவி ஆட்சியர் பூஜா அக்னிஹோத்ரி. தற்போது நகர்ப்புற வளர்ச்சித் துறை உதவி இயக்குநராக இருக்கிறார். தான் ஒரு அரசு அதிகாரி என்பதை கூறாமலேயே பூஜா அக்னிஹோத்ரி தனிப்பட்ட முறையில் நண்பர்களுடன் இணைந்து வாட்ஸ் அப் குழு அமைத்து உதவி வருகிறார்.
பூஜாவின் குழுவில் லக்னோ வடக்கு பகுதி மாவட்ட காவல் துறை ஏஎஸ்பி பூர்னேந்து சிங், மீரட்டின் ஏஎஸ்பி பிரீத்தி தீக்ஷித் மற்றும் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் ஏஎஸ்பி தேவேந்திர் சிங் ராஜ்பத் மற்றும் தொழிலதிபர், தனியார் நிறுவன அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பூஜா கூறும்போது, ‘‘எங்களது பணிக்கும் இந்த சேவைக்கும் தொடர்பில்லை. எங்கள் நட்பு வளையத்தின் உதவியால் சேவை செய்து வருகிறோம். சாக்கு, போக்கு சொல்லாமல் முடிந்தவரை நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு உதவுவதே இக்குழுவின் தாரக மந்திரம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT