Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM
கால்நடை பராமரிப்புத் துறை செயலர் கோபால் வசம், வேளாண் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வேளாண் துறை செயலராக இருந்த ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, வேளாண் துறை செயலர் பதவி காலியாக இருந்து வந்தது. இந்நிலையில், வேளாண் துறை செயலர் பதவியானது, தமிழக கால்நடை பராமரிப்பு, பால்மற்றும் மீன்வளத் துறை செயலராக இருந்த கே.கோபால் வசம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் சுகாதாரத் துறை சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பி.செந்தில்குமாருக்கு, உணவு பாதுகாப்பு ஆணையர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்புகளை தமிழக தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT