Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM
மதுரையில் சில தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு கள்ளச்சந்தை யில் ரெம்டெசிவிர் மருந்து விற் பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது. ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப் படுவதைத் தடுக்க போலீஸார் கண்காணித்தனர்.
இந்நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் மதுரை புது விளாங்குடியைச் சேர்ந்த இர்பான் கான் என்ற இளைஞரை செல்லூர் போலீஸார் நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர். அவர், செல்லூர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிபவர் என்றும், ரெம் டெசிவிர் மருந்துகளை வாங்கி இருப்பு வைத்து, தற்போது கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை கைது செய்தனர். அவருடன் மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசா ரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT