Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM

மாணவியை : கர்ப்பிணியாக்கிய : இளைஞர் மீது வழக்கு :

மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியை அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் என்ற இளைஞர் காதலித்ததாகக் கூறப்படுகிறது. மாணவியிடம் சுப்புராஜ் உறவு வைத்துள்ளார்.

இந்நிலையில், மாணவியை அவரது பெற்றோர் திருப்பூரில் பஞ்சாலை ஒன்றில் வேலைக்கு சேர்த்தனர். கடந்த பிப்ரவரியில் அவர் ஊருக்குத் திரும்பினார்.

அவருக்கு மே 4-ம் தேதி வயிறு வலி ஏற்பட்டு கருச்சிதைவு ஏற்பட்டது. அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக சுப்புராஜ் மீது போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x