Published : 13 May 2021 03:11 AM
Last Updated : 13 May 2021 03:11 AM

திருப்பதி கோயிலில் பக்தர்களுக்குசிறப்பு அனுமதி :

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி முதல் இம்மாதம் 31-ம் தேதி வரை சுவாமியை தரிசனம் செய்ய ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசனத்தில் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள், இந்த கரோனா பரவல் காரணமாக திருமலைக்கு வர இயலாமல் இருக்கலாம்.

ஆதலால், சம்பந்தப்பட்ட பக்தர்கள் தங்களது தரிசன நாட்களை இந்த வருடம் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஏதாவது ஒருதேதியில் அதே டிக்கெட் மூலம்திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசிக்கலாம். ஆனால்,ஒரு முறை மட்டுமே இதற்கு அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x