Published : 13 May 2021 03:11 AM
Last Updated : 13 May 2021 03:11 AM
ஆண்டுதோறும் மே 12-ம் தேதிசெவிலியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இதை யொட்டி, நேற்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘சர்வதேச செவிலியர்கள் தினம், கரோனா தொற்றுக்கு எதிராக முன்னின்று போராடும் கடும் உழைப்பாளிகளான செவிலியர் களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகும். ஆரோக்கியமான இந்தியாவை நோக்கிய பணி யில் செவிலியர்களின் கடமை உணர்ச்சி, கருணை, அர்ப்பணிப்பு முன்னுதாரணமாகத் திகழ்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வெளியிட்ட செய்தியில், ‘‘கரோனா தொற்று காரணமாக இந்த சிக்கலான நேரத்தில் திறமையான, பயனுள்ள, அர்ப்பணிப்புடன் கூடிய தொண்டாற்றும் செவிலியர் களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்’’ என்று கூறியுள்ளார். பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கூறுகையில், ‘‘மருத்துவ நிர்வாக அமைப்பின் முதுகெலும்பாக செயல்பட்டு செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். அர்ப்பணிப்புடன் பணியாற்றும் இந்திய செவிலியர்களுக்கு நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘உலகில் இருந்து வலியையும் நோயையும் அகற்ற பாடுபடும் செவிலியர்களுக்கு வாழ்த்துகள். உங்கள் ஆன் மாவைப் போற்றி உங்கள் சேவையை வணங்குகிறேன்’’ என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT