Published : 13 May 2021 03:12 AM
Last Updated : 13 May 2021 03:12 AM
கரோனா நிவாரணப் பணிகளுக்காக நடிகர் சிவகுமார் குடும்பம் சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று மாலை நேரில் சந்தித்த நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் தங்கள் குடும்பத்தின் சார்பில் ரூ.1 கோடி நிதிக்கான காசோலையை கரோனா தடுப்புப் பணிக்காக வழங்கினர்.
பின்னர் நடிகர் சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது :
மக்கள் நெருப்புக்குள் இருக்கிறார்கள். கரோனா வைரஸிடமிருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும். அதற்கு நாம் எல்லோரும் ஆதரவு தர வேண்டும். எங்களால் முடிந்த உதவியாக இந்த ரூ.1 கோடியை நிதியாக அளித்துள்ளோம். மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டிக்கொள்வோம்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் அப்பாவை 40 ஆண்டுகளாக அறிந்திருக்கிறேன். அவரது அரசியல் வாரிசு என்ற முறையில் மகனை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.தமிழ் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் தமிழ் காப்பாற்றப்படும்.
இவ்வாறு சிவகுமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT