Published : 13 May 2021 03:12 AM
Last Updated : 13 May 2021 03:12 AM
மதுரை நகரில் காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து, காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, மாட்டுத்தாவணி காவல் ஆய்வாளர் னிவாசன் கொடுங்குற்ற தடுப்பு புலனாய்வுப் பிரிவு(1)க்கும், கீரைத்துறை சட்டம், ஒழுங்கு ஆய்வாளர் ரவீந்திரன் மாட்டுத்தாவணிக்கும், காவல் கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர் ஆறுமுகம் கொடுங்குற்ற தடுப்பு புலனாய்வுப் பிரிவு(2)க்கும் மாற்றப்பட்டனர். கொடுங்குற்ற தடுப்பு(1) ஆய்வாளர் முகமது இத்ரீஸ் தல்லாகுளம் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கும், கொடுங்குற்ற தடுப்பு(2) ஆய்வாளர் பெத்துராஜ் கீரைத்துறை சட்டம்,ஒழுங்கு பிரிவுக்கும், கீதாலட்சுமி நகர்மகளிர் காவல் நிலைய ஆய்வாள ராகவும் மாற்றப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT