Published : 13 May 2021 03:12 AM
Last Updated : 13 May 2021 03:12 AM
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் உட்பட பல்வேறு பகுதிகளில் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ஆட்சியர் சாந்தா, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் உமா ஆகியோர் அறிவுறுத்தலின்பேரில், நன்னிலம் அரசு மருத்துவமனையில் 40 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதில், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி உட்பட 40 பேர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT