Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

50 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் - இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்ய சீரம் நிறுவனத்துக்கு அனுமதி மறுப்பு :

இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதால் 50 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசியை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்கான சீரம் நிறுவனத்தின் கோரிக்கைக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குத் தீவிரமாகப் பரவிவருகிறது. மேலும் தடுப்பூசி, ஆக்சிஜந் பற்றாக்குறையும் இருந்துவருகிறது. இந்நிலையில் முன்பே செய்துகொண்ட ஒப்பந்தப்படி இங்கிலாந்துக்கு சீரம் நிறுவனம் அனுப்ப இருந்த 50 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை மத்திய அரசு உள்நாட்டு தேவைக்காக நிறுத்தி வைத்துள்ளது.

தற்போது உள்நாட்டில் உள்ள தேவையைப் பூர்த்தி செய்வதே முக்கியம் என்ற நோக்கில் சீரம் நிறுவனத்தின் ஏற்றுமதிக்கான கோரிக்கையை அரசு நிராகரித்துள்ளது. மேலும் சீரம் நிறுவனத்தை அணுகி தேவையான தடுப்பூசிகளை மாநிலங்கள் கொள்முதல் செய்துகொள்ள வேண்டுமென்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த 50 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை விரைந்து கொள்முதல் செய்து தேவையின் அடிப்படையில் விநியோகம் செய்ய மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மாநில அரசுகள் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளும் இந்த தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய சீரம் நிறுவனத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பூசிகள் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளோருக்கான தடுப்பூசி வழங்கும் திட்டத்துக்காகப் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்ய இந்தத் தடுப்பூசிகள் தயாராக இருந்த நிலையில் தற்போது உள்நாட்டு தேவைகளுக்காகப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி குப்பிகளில் ஒட்டப்பட்டிருந்த எந்ற்றுமதிக்கான ஸ்டிக்கர்களை மாற்றி உள்நாட்டு விநியோகத்துக்கான ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டிய நிர்பந்தம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

--

Regrds

Saravanan.J

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x