Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

கரோனா சிகிச்சைக்கு பயன்படும் மாத்திரை ரூ.762 கோடிக்கு விற்பனை :

கரோனா சிகிச்சைக்கு பயன்படும் ஃபேபிஃப்ளூ என்ற மாத்திரை அதிக அளவில் விற்பனையாகிறது. கடந்த 12 மாதங்களில் ரூ. 762 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் தொற்றுக்கு எதிராகவும் நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகளை மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் மக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி, வைரஸ் தொற்றை அழிக்கப் பயன்படும் ஃபேபிஃப்ளூ என்ற மாத்திரை கரோனா சிகிச்சைக்கு பயன்படுகிறது. மும்பையைச் சேர்ந்த ’கிளென்மார்க்’ என்ற மருந்து நிறுவனம் இந்த மாத்திரைகளை விற்பனை செய்கிறது. மற்ற மருந்து மாத்திரைகளை விட இது அதிக அளவில் விற்பனையாகி உள்ளது. சர்க்கரை நோய்க்கான மருந்து, மாத்திரைகள்தான் பொதுவாக மருந்து சந்தையில் அதிகமாக விற்பனையாகும். ஆனால், அதையும் தாண்டி கரோனா தொற்று காரணமாக சந்தையில் ஃபேபிஃப்ளூ மாத்திரைகள் அதிகமாக விற்பனையாகின்றன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.352 கோடிக்கு ஃபேபிஃப்ளூ மாத்திரைகள் விற்பனையாகி உளளன. கடந்த 12 மாதங்களில் மொத்தம் ரூ.762 கோடிக்கு இந்த மருந்தின் விற்பனை நடந்து மருந்து சந்தையில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. கரோனா தொற்று காலத்தில் பெட்டாடைன், மோனோசெப், டோலோ, ஜிங்கோவிட் ஆகியவை அதிக அளவில் விற்பனையாகின்றன. என்றாலும், அவற்றை எல்லாம்விட ஃபேபிஃப்ளூ மாத்திரைகள் அதிக அளவில் விற்றுள்ளதாக மும்பையைச் சேர்ந்த மருந்து ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x