Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

கரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள் - பரம்பிக்குளம் பயணியர் மாளிகையில் தங்க அனுமதி :

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் கரோனா வார்டு மருத்துவர்கள், பரம்பிக்குளம் பயணியர் மாளிகையில் தங்கிக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார்.

திமுக சுற்றுச் சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, கோவை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜனுக்கு அனுப்பிய மனுவில், ‘‘பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் கரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள், பரம்பிக்குளம் பயணியர் மாளிகையில் தங்கியிருந்து மருத்துவப் பணிக்குச் சென்றுவந்தனர். தற்போது இந்த இடத்தைகாலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்றாளர்களுக்குச் சேவை செய்துவரும் காரணத்தால், அரசு மருத்துவர்கள் தொற்று சூழ்நிலையில் தங்கள்இணையர், குழந்தைகள் மற்றும் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு பயணியர் மாளிகையில் தங்கி வருகின்றனர். அரசு மருத்துவர்களுக்கு, தங்குமிடத்தை வழங்கத் தவறினால், அது சூழ் நிலையை மேலும் கடினமாக்கும். உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்தாலோசித்த மாவட்ட ஆட்சியர், ‘மருத்துவர்கள் பரம்பிக்குளம் பயணியர் மாளிகையில் தொடர்ந்து தங்கிக் கொள்ளலாம்’ என்று நேற்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x