Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

உடுமலையில் ஒர்க்‌ஷாப் உரிமையாளர் கொலை : தலைமறைவான ஊழியரை தேடும் போலீஸ்

உடுமலை அருகே மர்மமான முறையில் ஒர்க்‌ஷாப் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அங்கு பணிபுரிந்த ஊழியரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சின்னவீரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (42). திருமணமானவர். பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடால் மனைவியை பிரிந்து தாயுடன் வசித்து வந்தார். விவசாயம், வேபிரிட்ஜ், ஒர்க்‌ஷாப் ஆகியவற்றை நடத்தி வந்துள்ளார். ஒர்க்‌ஷாப்பில் அக்பர் அலி, அரவிந்த்குமார் ஆகிய இருவர் ஊழியர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். கடந்த 10-ம் தேதி காலை கமலக்கண்ணனும், அரவிந்த்குமாரும் பேசிக்கொண்டிருந்தனர். அதே ஊரைச் சேர்ந்த சண்முகவடிவேல் (42) நேற்று கமலக்கண்ணன் வீட்டுக்கு சென்றபோது, அவரை காணவில்லை என்று அவரது தாயார் தெரிவித்துள்ளார். ஒர்க்‌ஷாப்பில் சென்று பார்த்தபோது ரத்த காயங்களுடன் கமலக்கண்ணன் சடலமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் உடுமலை போலீஸார் சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள அரவிந்த்குமாரை தேடி வருகின்றனர்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x