Published : 12 May 2021 03:15 AM
Last Updated : 12 May 2021 03:15 AM

உசிலம்பட்டியில் வெளியே வந்தவர்களை - அறிவுரை கூறி அனுப்பிய போலீஸார் :

இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி விசாரிக்கும் போலீஸார்.

மதுரை

கரோனா 2-ம் அலை பரவலால் முழு ஊரடங்கு அறிவிக் கப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் பிற்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையின்றி பைக்குகளில் செல்வோரை போலீஸார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.

உசிலம்பட்டி தேவர் சிலை முன் டிஎஸ்பி ராஜன் தலைமையில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி, கனிவுடன் விசாரித்து அத்தியாவசியத் தேவைக்குச் செல்வோரை அனுமதித்தனர். ஆனால் தேவையின்றி வந்தவர்களை வீட்டிலேயே பாது காப்பாக இருக்கும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x