Published : 12 May 2021 03:15 AM
Last Updated : 12 May 2021 03:15 AM
மதுரை மாவட்டம் திருமங் கலம் அருகில் உள்ள பி.வாகைக் குளத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி சிவலட்சுமி(31). இவர் திருமங்கலம் ஊராட்சி ஒன் றிய அலுவலகத்தில் மகளிர் திட்ட மண்டல ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிகிறார்.
இவர் கடந்த 10-ம் தேதி திருமங்கலத்தில் இருந்து பி.வாகைக்குளத்துக்கு தனது மொபெட்டில் சென்றார்.
கணக்கன் நகர் அருகே சென்றபோது, மற்றொரு பைக்கில் அவரை பின்தொடர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளை ஞர் திடீரென சிவலட்சுமியின் மீது மோதி கீழே தள்ளினார்.
இதில் சாலையோரமாக விழுந்து காயமுற்ற அவருக்கு உதவி செய்வது போன்று நடித்து, அவர் அணிந்திருந்த 9 பவுனை பறித்துக் கொண்டு தப்பினார். இதுகுறித்து சிந்துப்பட்டி போலீஸார் விசாரிக் கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT