Published : 12 May 2021 03:15 AM
Last Updated : 12 May 2021 03:15 AM
கழுகுமலை ஓம்சக்தி நகரைச் சேர்ந்த காளிதாஸ் மனைவி சாந்தி(36). இவர் தன்னிடமிருந்த உடைந்த தங்க கம்மலை சரிசெய்யநகை பட்டறைக்குச் சென்றுள்ளார். சரிசெய்ய 2 மணி நேரம் ஆகும்என்று கூறியதால், சாந்தி அங்கிருந்து கிளம்பினார். அப்போது நகைக்கடையில் இருந்த நபர், கம்மலை எனது அண்ணனிடம் கூறி சரிசெய்து தருகிறேன் என்று சொல்லி, சாந்தியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.
கழுகுமலை - கோவில்பட்டி சாலை காலாங்கரைப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சிறியபாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய அந்த நபர், சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகை மற்றும் காதில் அணிந்திருந்த கம்மலை கேட்டு தாக்கியுள்ளார். சாந்தி தன்னிடமிருந்த சுமார் 6 பவுன் நகையை அந்த நபரிடம் கொடுத்தவுடன், அந்த நபர் தப்பிவிட்டார். கழுகுமலை காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி, பழங்கோட்டையைச் சேர்ந்த திருமலைகுமாரை(36) கைது செய்தனர். தங்க நகைகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT