Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM

கடலோர மாவட்டங்களில் : 3 நாட்களுக்கு வெப்பநிலை உயரும் :

சென்னை

மேற்கு, வடமேற்கு திசையிலிருந்து தமிழகம் நோக்கி தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் 11, 12, 13 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் தற்போது நிலவும் அதிகபட்ச வெப்பநிலையைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது,

‘‘தென் தமிழகம், அதை ஒட்டியபகுதியில் வளி மண்டல சுழற்சிகாரணமாக 11-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள், சேலம், தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களிலும், 12-ம் தேதி கடலோர மாவட்டங்கள், ஒருசில உள் மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் மிதமானமழை பெய்யக் கூடும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x