Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM

மின் கட்டணம் செலுத்தமே 31-ம் தேதி வரை அவகாசம் : மின் பகிர்மானக் கழகம் அறிவிப்பு

மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் வரும் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் வரும் 24-ம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தாழ்வழுத்த மின் நுகர்வோரின் சிரமங்களைக் கருத்தில்கொண்டு, சில வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கடைசி தேதி10-ம் தேதியில் இருந்து வரும் 24-ம் தேதி வரை இருப்பின், அத்தொகையை வரும் 31-ம் தேதி வரை செலுத்த கால அவகாசம் வழங்கப்படுகிறது.

அதேபோல, ஊரடங்கு காலத்தில் மின் கணக்கீடு செய்ய வேண்டிய மின் நுகர்வோர், 2019 மே மாதம் கணக்கீடு செய்யப்பட்ட தொகையையே செலுத்த வேண்டும்.

புதிய நுகர்வோர் அல்லது அவ்வாறு கணக்கீடு இல்லாதவர்கள் 2021 மார்ச் மாத கணக்கீட்டின்படி கட்டணம் செலுத்தலாம். வரும் மாதங்களில் இத்தொகை முறைப்படுத்தப்படும்.

மே மாதத்துக்கான கணக்கீட்டுத் தொகை மின் நுகர்வோரின் செல்போனுக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும்.

இதுகுறித்த விவரத்தை மின் வாரிய இணையதளத்திலும் (www.tangedco.gov.in ) தெரிந்து கொள்ளலாம்.

மின் கட்டணத்தை இணையதளம், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், பேமண்ட் கேட்வே மூலம் செலுத்தி, மின் கட்டண கவுன்ட்டர்களுக்கு நேரில் வருவதைத் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x