Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM
திருப்பூர்: முழு ஊரடங்கு நாட்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளதையடுத்து, கூடுதலாக மது வாங்கி வைக்க டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் அலைமோதுவது வழக்கம். அந்த வகையில், தமிழகத்தில் மது விற்பனையில் முன்னணியில் உள்ள நகரங்களுள் திருப்பூரும் ஒன்று. கடந்த 2 நாட்களில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள 253 டாஸ்மாக் கடைகளிலும் வழக்கத்தைக் காட்டிலும் மது விற்பனை பல மடங்கு அதிகரித்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் டாஸ்மாக் கடைகள் மூடி 'சீல்' வைக்கப்பட்டன. அதன்படி, கடந்த 8-ம் தேதி ரூ.18 கோடிக்கும், நேற்று முன்தினம் ரூ.20 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT