Published : 11 May 2021 03:12 AM
Last Updated : 11 May 2021 03:12 AM

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் - ரெம்டெசிவிர் மருந்து வாங்க திரண்ட நோயாளிகளின் உறவினர்கள் :

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா சிகிச் சைக்கான ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்கு நோயாளிகளின் உறவினர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

கரோனா தொற்று தீவிரமாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து செலுத் தும்போது அவர்கள் அந்த நோயி லிருந்து மீண்டு வருவதாகக் கூறப் படுகிறது.

அதனால், இந்த மருந்துக்கு உலகளவில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைபெறும் நோயாளிகளுக்கு இந்த மருந்து இலவசமாகச் செலு த்தப்படுகிறது.

தனியார் மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இந்த மருந்து இல்லை. சென்னை, கோவை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இந்த மருந்து குறிப்பிட்ட விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போது விற்கப்படும் இந்த மருந்துகளை வாங்குவதற்கு கரோனா நோயாளிகளின் உறவி னர் ஏராளமானோர் வருகின்றனர்.

இந்த மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மருந்துகள் வாங்க நோயாளிகளின் உறவி னர்கள் மருத்துவக் கல்லூரியில் மருந்து விற்கப்படும் இடத்தில் அதிகாலை முதலே அதிகளவில் திரண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, மருந்து கையி ருப்பு மற்றும் மருந்து வாங்க வருவோரின் அலைச்சலைத் தவிர்க்கும் வகையில் முதல் நாளே டோக்கன் வழங்கப்பட்டு மறுநாள் டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x