Published : 11 May 2021 03:12 AM
Last Updated : 11 May 2021 03:12 AM
அரக்கோணம் ரயில்வே மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகளை ஏற்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டுமென அரக்கோணம் சட்டப்பேரவை உறுப்பினர் சு.ரவி, சென்னை மண்டல ரயில்வே மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக மாவட்டச்செயலாளரும், அரக்கோணம் சட்டப்பேரவை உறுப்பினருமான சு.ரவி, சென்னைமண்டல ரயில்வே மேலாளருக்குஅனுப்பியுள்ள கடிதத்தில் கூறியி ருப்பதாவது, "ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும்அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா தொற்று அதிகமாக பரவியுள்ளது. அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கரோனாநோயாளிகள் அதிகமாக இருப்பதால் புதிய நோயாளிகளுக்கு இடமில்லை என தெரிகிறது. அரசு மருத்துவ மனையில் படுக்கை கிடைக்காமல் ஏழை, எளிய மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
அரக்கோணம் நகர் பகுதியில்உள்ள ரயில்வே மருத்துவ மனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ரயில்வே தொழிலாளர்கள் புற நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு சாதாரண சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
ஆக்சிஜன் மற்றும் வெண்டி லேட்டர் தேவைப்பட்டால் அந்நோயாளிகள் பெரம்பூர் ரயில்வேமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நோயாளி கள் பெரம்பூர் ரயில்வே மருத் துவமனைக்கு செல்வதற்குள்ளாக அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, அரக்கோணம் ரயில்வே மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டை அமைத்து அங்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி ஏற்படுத்த வேண்டும். அதேபோல, வெண்டிலேட்டர் வசதியும் ஏற்படுத்த வேண்டும்.
மேலும், அரக்கோணம் ரயில்வே மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் சிகிச்சை அளிக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT