Published : 10 May 2021 06:23 AM
Last Updated : 10 May 2021 06:23 AM
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர்மாவட்டம் வீரேந்திர நகரைச் சேர்ந்தவர் ஷாம்ராவ் இங்லே. 103 வயதான இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து பால்கரில் உள்ள மாவட்ட கரோனா சிகிச்சை மையத்தில் அவர் சேர்க்கப்பட்டார். சிகிச்சை வெற்றிபெற்ற நிலையில் நேற்று முன்தினம் அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து மருத்துவமனை ஊழியர்கள், மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைத்தனர்.
103 வயதிலும் அவர் நல்லஆரோக்கியத்துடன் இருந்ததால் அவருக்கு அளித்த மருந்துகள் வேலை செய்து அவர் நோயிலிருந்து எளிதில் குணமடைந்துள்ளார் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து 103 வயது முதியவருக்கு சிறப்பான சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்களுக்கு பால்கர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மாணிக் குர்சா பாராட்டு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT