Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM

அவிநாசி அருகே கருமாபாளையத்தில் நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு :

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கருமாபாளையம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னான் (50). சுமை தூக்கும் தொழிலாளியான இவர், அருகே உள்ள தோட்டத்து தொட்டிக்கு நேற்று குளிக்க சென்றுள்ளார். தொட்டிக்குள் இறங்கிய நிலையில், எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு சேவூர் போலீஸார் சென்று, சின்னானின் உடலை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x