Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM
உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் நாளொன்றுக்கு சுமார் 30 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. அவற்றை 3 கி.மீ. தொலைவில் உள்ள உரக்கிடங்குக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில மாதங்களாக ஆங்காங்கே வீதிகளிலும், பொதுமக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையம், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளிலும் கொட்டி தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் நகர் முழுவதும் துர்நாற்றம் வீசும் நச்சு புகையை, மக்கள் சுவாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, "துப்புரவு மேற்பார்வையாளர்கள் முன்னிலையிலேயே கடை நிலை ஊழியர்கள் குப்பையை தீ வைத்து எரிக்கின்றனர். உடுமலை மத்தியப் பேருந்து நிலையப் பகுதியில் குப்பையை எரித்ததால், அப்பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது. நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, "வேறு எந்த நகராட்சியிலும், இதுபோன்ற செயல்பாடுகள் இல்லை. உடுமலையில்தான் இவ்வாறு உள்ளது. புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT