Published : 10 May 2021 06:25 AM
Last Updated : 10 May 2021 06:25 AM

சேத்துப்பட்டு அருகே - விபத்தில் விவசாயி உயிரிழப்பு :

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு அருகே சாலை யோர பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்ததில் விவசாயி பரிதாப மாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ராந்தம் மலைமேடு பகுதியில் வசித்தவர் ராமஜெயம்(27). இவர், தனது நிலத்தில் டிராக்டர் மூலம் உழவு பணியில் ஈடுபட்டிருந்தபோது, சேற்றில் டிராக்டர் சிக்கிக் கொண்டது.

இதையடுத்து, சேற்றில் சிக்கிய டிராக்டரை மீட்பதற்காக, அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ஒருவருக்கு சொந்தமான டிராக்டரை எடுத்து வந்துள்ளார். நிலத்துக்கு செல்லும் வழியில், சாலையோரம் இருந்த பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ராமஜெயம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போளூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x