Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM
மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு சு.வெங்க டேசன் எம்பி கடிதம் அனுப் பியுள்ளார். அக்கடிதத்தில் குறிப் பிட்டுள்ளதாவது:
தமிழக முதல்வர் மு.க.ஸ் டாலின், பிரதமர் மோடிக்கு தமிழகத்தில் நிலவும் ஆக்சிஜன் நெருக்கடி குறித்து கடிதம் எழுதி யுள்ளார். அதில் ஏற்கெனவே ஏற்றுக் கொண்டபடி கூடுதல் ஆக்சிஜன் ஒதுக்கீட்டை உட னடியாக வழங்குமாறும், ஆக் சிஜன் தேவை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய முதல்வரின் முதல் கடிதத்தில் தமிழக மக்களின் உயிர்களைக் காப்பாற்ற பிரத மரின் உடனடி தலையீட்டைக் கோரியுள்ளார். ஆனால் மத்திய அரசின் துறை அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒதுக்கீடான 476 மெட்ரிக் டன், 5 நாட்களாகியும் இன்னும் வந்து சேரவில்லை என் பது வேதனைக்குரியது. தற்போது 220 மெட்ரிக் டன் ஒதுக்கீடாக உள்ளது. தினமும் கோவிட் மரணங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
மேலும் 2 வாரங்களில் ஆக்சிஜன் தேவை 840 மெட்ரிக் டன்னாக உயர வாய்ப்புள்ளதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். எனவே மத்திய அரசு சிறிதும் தாமதமின்றி உடனடியாகச் செய லாற்ற வேண்டிய நெருக்கடி மிக்க நேரம்.
தமிழகத்துக்கு ஆக்சிஜன் ஒதுக்கீடு 840 மெட்ரிக் டன்னாக உடனே உயர்த்த வேண்டும். அனைத்து பொதுத்துறை நிறுவ னங்களில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
ஆதார ஏற்பாடுகளான ஐ.எஸ்.ஓ கிரையோஜினிக் சாதனங்கள், ரயில்கள் உறுதி செய்யப்படவேண்டும். மத்திய அரசே, தமிழகத்துக்கு உடனடியாக மூச்சுக் காற்றை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT