Published : 08 May 2021 03:13 AM
Last Updated : 08 May 2021 03:13 AM

விராட் கோலிரூ.2 கோடி கரோனா நிதி உதவி :

மும்பை

கெட்டோ எனும் சமூக வலைதளத்தின் மூலம் கரோனா நிவாரண நிதியாக ரூ.7 கோடி திரட்ட கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, அவரின் மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.அதில் முதல்கட்டமாக தங்கள் பங்களிப்பாக ரூ. 2 கோடியை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து விராட் கோலி வெளியிட்ட அறிக்கையில், ‘‘கெட்டோ தளத்தில் 7 நாட்கள் பிரச்சாரம் நடக்கும், அதன்பின் அந்த நிதி ஏசிடி அமைப்புக்கு வழங்கப்பட்டு, அவர்கள் மூலம் கரோனாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆக்சிஜன், மருத்துவ வசதிகள், தடுப்பூசி விழிப்புணர்வு, தொலைபேசி மருத்துவ உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். அனை வரும் ஒன்று சேர்ந்து, பலரின் உயிரைக் காப்பதுதான் தேசத் துக்கு அவசியம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x