Published : 08 May 2021 03:14 AM
Last Updated : 08 May 2021 03:14 AM

புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி : ஆளுநர் தமிழிசை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

புதுச்சேரி மாநிலத்தின் முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நேற்று பதவியேற்றார். அவருக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

புதுச்சேரியில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்கள், பாஜக 6 இடங்கள் என ஆட்சி அமைக்க தேவையான 16 இடங்களை கைப்பற்றின.

இதையடுத்து, என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவராக ரங்கசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல், பாஜக எம்எல்ஏக்கள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த 3-ம் தேதி மாலை ஆட்சி அமைக்க உரிமை கோரி என்.ஆர்.காங்கிரஸ், பாஜகவைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஆளுநர் தமிழிசையிடம் ரங்கசாமி வழங்கினார். தொடர்ந்து, மே 7-ம் தேதி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றுக் கொள்வதற்கான கடிதத்தை என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெயபால், பக்தவச்சலம் ஆகியோர் ஆளுநரிடம் வழங்கினர்.

இதைத் தொடர்ந்து, புதுச்சேரி ஆளுநர் மாளிகை வளாகத்தில் நேற்று எளிமையான முறையில் முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற்றது. முன்னதாக வீட்டில் இருந்து புறப்பட்டு அப்பா பைத்தியம் சாமி கோயிலில் வழிபாடு நடத்திய ரங்கசாமி பின்னர் பிற்பகல் 1.20 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு வந்தார். ஆளுநர் தமிழிசை வணக்கம் கூறி ரங்கசாமிக்கு தமிழிலேயே பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ரங்கசாமி கடவுளின் பெயரால் உறுதி மொழி ஏற்றுக்கொண்டு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, ரங்கசாமிக்கு ஆளுநர் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு ஆளுநருக்கு ரங்கசாமி சால்வை அணிவித்து, பூச்செண்டு வழங்கினார். தொடர்ந்து, தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டி, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, பாஜக தமிழக மாநிலத் தலைவர் எல்.முருகன், புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், பாஜக பொறுப்பாளர் கள் நிர்மல்குமார் சுரானா, ராஜிவ் சந்திர சேகர் எம்பி, அதிமுக எம்பி கோகுலகிருஷ்ணன், புதுவை அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, ரங்கசாமிக்கு பூச் செண்டு வழங்கியும் சால்வை அணிவித் தும் வாழ்த்து தெரிவித்தனர்.

விழாவில் ரங்கசாமி மட்டுமே முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணியில், பாஜகவுக்கு துணை முதல்வர், 2 அமைச் சர்கள் வேண்டும் என கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் கிஷன்ரெட்டி கூறும்போது, ‘‘என்.ஆர்.காங்கிரஸுக்கு 3 அமைச்சர்கள், பாஜக வுக்கு ஒரு துணை முதல்வர் உள்ளிட்ட 3 அமைச்சர்கள் பதவி என பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்துள்ளோம். ஓரிரு நாட் களில் அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்கள் பொறுப்பேற்பார்கள்’’ எனத் தெரி வித்தார்.

4-வது முறையாக முதல்வர்

புதுச்சேரி மாநிலத்தின் 20-வது முதல் வராக ரங்கசாமி நேற்று பதவியேற்றார். இவர் 4-வது முறையாக முதல்வர் பொறுப் புக்கு வருகிறார். இரண்டு முறை காங் கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வராக இருந் துள்ளார். அதன்பிறகு காங்கிரஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதில் இருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸை தொடங்கினார். அக்கட்சி சார்பில் 2011-ம் ஆண்டு முதன் முறையாகவும் தற்போது 2-வது முறையாகவும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x