Published : 08 May 2021 03:14 AM
Last Updated : 08 May 2021 03:14 AM
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தற்போது 3-ம் கட்டமாக கடந்த 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியது. அந்த வகையில் 18 வயது முதல் 44 வயது வரையிலான பிரிவில் இதுவரை 11,80,798 பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அந்தமானில் 330 பேர், ஆந்திராவில் 16 பேர், அசாமில் 220 பேர், பிஹாரில் 284 பேர், சண்டிகரில் 2 பேர், சத்தீஸ்கரில் 1,026 பேர், டெல்லியில் 1,83,679 பேர், கோவாவில் 741 பேர், குஜராத்தில் 2,24,109 பேர், ஹரியாணாவில் 1,69,409 பேர், இமாச்சல பிரதேசத்தில் 14 பேர், காஷ்மீரில் 21,249 பேர், ஜார்க்கண்டில் 77 பேர், கர்நாடகாவில் 7,068 பேர், கேரளாவில் 22 பேர், லடாக்கில் 86 பேர், மத்திய பிரதேசத்தில் 9,823 பேர், மகாராஷ்டிராவில் 2,15,274 பேர், மேகாலயாவில் 2 பேர், நாகாலாந்தில் 2 பேர், ஒடிசாவில் 28,327 பேர், புதுச்சேரியில் ஒருவர், பஞ்சாபில் 2,187 பேர், ராஜஸ்தானில் 2,18,795 பேர், தமிழகத்தில் 8,419 பேர், தெலங்கானாவில் 440 பேர், திரிபுராவில் 2 பேர், உத்தர பிரதேசத்தில் 86,420 பேர், உத்தராகண்டில் 17 பேர், மேற்குவங்கத்தில் 2,757 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT