Published : 08 May 2021 03:14 AM
Last Updated : 08 May 2021 03:14 AM

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் - முன்னணி மாநிலமாக தமிழகம் திகழும் : பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் நம்பிக்கை

கோவை

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழும் என பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகமது ரஃபி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கூட்டணியுடன் 159 தொகுதிகளில் வெற்றி பெற்று, திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ள 5 முத்தான திட்டங்கள் மிகவும் வரவேற்கத்தக்கவை.

முதல் தவணையாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்து பெண்களுக்கும் கட்டணம் இலவசம், கரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கான மருத்துவ செலவை அரசே ஏற்றுக் கொள்ளும், பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு ஆகியவை மகிழ்ச்சியளிக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழகம் இனி இந்தியாவிலேயே முன்னணி மாநில மாக திகழும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x