Published : 08 May 2021 03:14 AM
Last Updated : 08 May 2021 03:14 AM

உடுமலை வட்டாரத்தில் மழை :

உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம், கணியூர் பகுதிகளில் நேற்று பகலில் கருமேகங்கள் திரண்டு,சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன்பலத்த காற்றும் வீசியது. தொடர்ந்துகனமழை பெய்தது.

விவசாயிகள் கூறும்போது, "தற்போதைய சூழலில் விவசாயிகளுக்கு மழை தேவை. ஏனெனில்,நீண்ட கால பயிரான கரும்பு தற்போது அறுவடை நிறைவடைந்து, அடுத்த நடவுக்காக தயாராகும் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர் நிலைகள் நிரம்பின. அடுத்து நிலவிய வறட்சியான சூழலால், நீர் நிலைகளில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. இந்த மழை, சூடான தட்பவெப்ப நிலையை மாற்றும் விதமாக அமைந்துள்ளது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x