Published : 08 May 2021 03:15 AM
Last Updated : 08 May 2021 03:15 AM

முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்: அரசு செவிலியர்கள் சங்கம் வலியுறுத்தல் :

தஞ்சாவூர்: தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் கே.வளர்மதி, மாநிலத் தலைவர் கோ.சக்திவேல் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

தமிழகத்தில் கரோனா 2-வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனாவை சமாளிக்கும் வகையில் முன்கள போர் வீரர்களாக செவிலியர்கள் தன்னலமற்ற, அயராத, முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய சேவையை சிறப்பாக செய்து வருகிறோம்.

தற்போது நிலவும் சூழல் மிகவும் கடினமாக உள்ளதால், கரோனா தொற்றிலிருந்து மக்களையும், நாட்டையும் காப்பாற்ற பொது முழு ஊரடங்கை அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கையாக வைக்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x