Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM
அதிமுக வெற்றி பெற யாகம் நடத்திய கோவையைச் சேர்ந்த அதிமுக மாநில நிர்வாகி, திமுகவில் இணைந்தார்.
கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரபு. இவர், அதிமுகவின் இளைஞர், இளம் பெண்கள் பாசறையின் மாநில துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என வேண்டி, கடந்தாண்டு கோவையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சென்று யாகம் நடத்தினார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை வடக்குத் தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், சீட் கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த விஷ்ணு பிரபு நேற்று முன்தினம் திமுகவில் இணைந்தார். இதுதொடர்பாக அவர் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘‘தற்போது கட்சி அந்தந்த மாவட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. தேர்தல் தோல்விக்கு பிறகும், இவர்கள் தங்களது தவறுகளை சரி செய்வதாக தெரியவில்லை. எனவே, நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT