Published : 06 May 2021 03:12 AM
Last Updated : 06 May 2021 03:12 AM

133 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரினார் - முதல்வராக ஸ்டாலின் நாளை பதவியேற்பு : ஆளுநர் பன்வாரிலால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்

ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை காலை 9 மணிக்கு தமிழக முதல்வராக பதவியேற்கிறார். கிண்டி ராஜ்பவனில் நடக்கும் எளிய விழாவில் அவருக்கு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர் தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. 125 இடங்களில் வென்ற திமுக, தனிப்பெரும்பான்மை யுடன் ஆட்சி அமைக்கிறது. திமுக சார் பில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயம் கலை ஞர் அரங்கில் நேற்று முன்தினம் நடை பெற்றது. அதில் திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக வின் 125 எம்எல்ஏக்களும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மதிமுக (4), மனிதநேய மக்கள் கட்சி (2), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (1), தமிழக வாழ்வுரிமை கட்சி (1) ஆகிய கட்சிகளின் 8 எம்எல்ஏக்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதைத் தொடர்ந்து நேற்று காலை 10 மணி அளவில் கிண்டி ராஜ்பவனுக்கு சென்ற ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். அப்போது திமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவ ராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடி தத்தை வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோரினார். முதல்வராக பொறுப்பேற்க வுள்ள ஸ்டாலினுக்கு ஆளுநர் பொன் னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித் தார். இந்த சந்திப்பின்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

ஆளுநர் அழைப்பு

ஸ்டாலின் அளித்த கடிதத்தை ஏற்று, அவரை ஆட்சி அமைக்க வருமாறு ஆளு நர் அழைப்பு விடுத்தார். அதன்படி, நாளை (7-ம் தேதி) காலை 9 மணிக்கு கிண்டி ஆளு நர் மாளிகை வளாகத்தில் உள்ள திறந்த வெளி அரங்கில் பதவியேற்பு விழா நடக் கிறது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி யேற்கிறார். அவருக்கு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார். முதல்வருடன் 30 முதல் 32 அமைச்சர்கள் பதவியேற்க இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன் முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, அர.சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், ஆர்.லட்சுமணன், மு.பெ.சாமி நாதன், என்.கயல்விழி, க.ராமச்சந்திரன், காடுவெட்டி ந.தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, கே.ஆர்.பெரியகருப்பன், ஆ.தமிழரசி, வரலட்சுமி, கீதா ஜீவன், பி.டி.ஆர். பழனி வேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், காதர்பாட்சா முத்துராமலிங்கம், அப்துல் வகாப், மனோ தங்கராஜ், அ.வெற்றிஅழகன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரில் பெரும் பாலானோர் அமைச்சராக வாய்ப்புள்ள தாக திமுகவினர் தெரிவிக்கின்றனர். சென்னை மேயராக இருந்த மா.சுப்பிர மணியன் சுகாதாரத் துறை அமைச்சராகக் கூடும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x