Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM
கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் வழியாக மேற்கு வங்க மாநிலம் மால்டாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கூட்ட நெரிசலைக் கருத்தில்கொண்டு கோடைகால சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்து வருகிறது.
அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து வரும் 8, 11-ம் தேதிகளில் மாலை 6 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண். 06185) சென்னை சென்ட்ரல் வழியாக, அடுத்த 3-வது நாளில் மேற்கு வங்க மாநிலம் மால்டாவுக்கு செல்லும். இதேபோல, மறுமார்க்கமாக மால்டாவில் இருந்து 11, 14-ம் தேதிகளில் இரவு 7.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண். 06186) சென்னை சென்ட்ரல் வழியாக அடுத்த 3வது நாளில் இரவு 11.10 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (மே 6) காலை 8 மணிக்குத் தொடங்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT