Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

பெண்ணிடம் 11 பவுன் சங்கிலி பறிப்பு :

பெரம்பலூர்

பெரம்பலூர் சாமியப்பா நக ரைச் சேர்ந்தவர் புவமனம்மா தேவி(45). இவர் நேற்று மதி யம் தனது இருசக்கர வாக னத்தில் பெரம்பலூர் முத்து நகர் அருகே சென்று கொண் டிருந்தபோது, அவரை பின் தொடர்ந்து மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், புவமனம்மா அணிந் திருந்த 11 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகா ரின்பேரில் பெரம்பலூர் போலீ ஸார் விசாரித்து வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் கொளத்தூரைச் சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி கலை யரசி(22). 9 மாத கர்ப்பிணி யான இவர், பெரம்பலூர் வெங்கடேசபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று காலை வந்தார். அங்கு அவர் கழிப்பறைக்குச் சென்றபோது, அவரைப் பின் தொடர்ந்து வந்த ஒரு பெண், கலையரசியின் முகத்தில் மிள காய் பொடியைத் தூவி, அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கி லியை பறித்தார். அப்போது, கலையரசி சப்தமிட்டதால் மருத்துவமனையில் இருந் தவர்கள் ஓடிவந்து, நகை பறிப்பில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து போலீஸில் ஒப்படைத் தனர். விசாரணையில், அந்தப் பெண், குன்னம் சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த பிரியா(23) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x